தமிழகத்தில் சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் எர்ரஹள்ளி கிராமத்திற்கு அருகே வியாழக்கிழமை ஒரு ஆம்னி பேருந்து பின்னால் இருந்து ஐந்து பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது மோதியதில் மூன்று மாத குழந்தை உட்பட 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாக காவேரிப்பட்டினம் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் தருமபுரியில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளிகள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் யு முனுசாமி (55), மல்லி (50), சி வசந்தி (45), சி முத்து (22) மற்றும் மூன்று மாத குழந்தை எஸ் வர்ஷினி என அடையாளம் காணப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்தின் ஓட்டுநர் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி (49) கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: